தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘அன்பிற்கினியாள்’. சுமார் 16 வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகர் அருண்பாண்டியன் இப்படத்தில் தந்தையாகவும், அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்திருக்கிறார்கள்.
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஸ்மோரா’, ‘ஜுங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.
பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வருவதோடு, தரமான படங்களை வெளியிடும் நிறுவனம் என்ற பெயர் எடுத்துள்ள சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் வெளியாகும் படங்கள் என்றாலே திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுவதுண்டு. அந்த வகையில், இப்படமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யு சான்றிதழ் பெற்றிருக்கும் ‘அன்பிற்கினியாள்’ வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...