தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘அன்பிற்கினியாள்’. சுமார் 16 வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகர் அருண்பாண்டியன் இப்படத்தில் தந்தையாகவும், அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்திருக்கிறார்கள்.
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஸ்மோரா’, ‘ஜுங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.
பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வருவதோடு, தரமான படங்களை வெளியிடும் நிறுவனம் என்ற பெயர் எடுத்துள்ள சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் வெளியாகும் படங்கள் என்றாலே திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுவதுண்டு. அந்த வகையில், இப்படமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யு சான்றிதழ் பெற்றிருக்கும் ‘அன்பிற்கினியாள்’ வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...