இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரை தொடர்ந்து, இசையமைப்பாளர் ஷாம் டி.ராஜும் ஹீரோவாகிறார். ‘கால் டாக்ஸி’ படத்தை இயக்கிய பா.பாண்டியன் இயக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் சாம் டி.ராஜ் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் ஆகியோரிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.
இப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்களைப் பற்றியும், கதாநாயகி பற்றியும் விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது.
கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் சென்னையில் தொடங்குகிறது.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்...
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் ( Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே நிறைவு பெற்றிருக்கிறது...
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'...