இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரை தொடர்ந்து, இசையமைப்பாளர் ஷாம் டி.ராஜும் ஹீரோவாகிறார். ‘கால் டாக்ஸி’ படத்தை இயக்கிய பா.பாண்டியன் இயக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் சாம் டி.ராஜ் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் ஆகியோரிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.
இப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்களைப் பற்றியும், கதாநாயகி பற்றியும் விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது.
கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் சென்னையில் தொடங்குகிறது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...