’மைனா’, ‘கும்கி’, ‘கயல்’, ‘தொடரி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு சாலமன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ’காடன்’ படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன், என்ன படம் இயக்கப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, அவர் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.
’மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சேவியர் பிரிட்டோ தனது எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் ‘அழகியே கண்ணே’. அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கும் இப்படத்தில் பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் விஜயகுமார் பிரபு சாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு, பிரபு சாலமனுக்கு கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போக, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘லிக்’ (Lik - Love Insurance Kombany) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, ஆவடியில் உள்ள வேல்டெக் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், விஜய் சேதுபதி நடிப்பில், பி...
பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின், சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது...