’மைனா’, ‘கும்கி’, ‘கயல்’, ‘தொடரி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு சாலமன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ’காடன்’ படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன், என்ன படம் இயக்கப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, அவர் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.
’மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சேவியர் பிரிட்டோ தனது எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் ‘அழகியே கண்ணே’. அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கும் இப்படத்தில் பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் விஜயகுமார் பிரபு சாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு, பிரபு சாலமனுக்கு கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போக, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...