’மைனா’, ‘கும்கி’, ‘கயல்’, ‘தொடரி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு சாலமன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ’காடன்’ படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன், என்ன படம் இயக்கப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, அவர் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.
’மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சேவியர் பிரிட்டோ தனது எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் ‘அழகியே கண்ணே’. அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கும் இப்படத்தில் பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் விஜயகுமார் பிரபு சாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு, பிரபு சாலமனுக்கு கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போக, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’...
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu, known as a champion of the poor and famously known for riding a bicycle to the Assembly...
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...