கோலிவுட்டின் பிளே பாய், என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா பற்றி அவ்வபோது பல காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காத ஆர்யா மீது இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், பணத்துக்காக கஷ்ட்டப்படுவதாக தன்னிடம் கூறிய ஆர்யா, தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். இதை நம்பி அவருக்கு தான் ரூ.70 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார், என்று புகார் அளித்துள்ளார்.
தற்போது ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் அந்த பெண், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக இந்த புகாரை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...