விஜய்யின் பெயரில் அவருடைய அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று கூறிய விஜய், அந்த சம்பவத்தில் இருந்து எஸ்.ஏ.சி-யுடன் பேசுவதில்லை, என்று அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில், தான் செய்தது தவறு என்றால் அதற்காக தனது மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்பதாக பேட்டி ஒன்றில் எஸ்.சே.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு அப்பனா சொல்றேன். நான் நடிக்கலை. நடிக்கத் தெரியாது. ஒரு தகப்பனா சொல்றேன். அப்பன் புள்ளைககிட்ட நடிக்க மாட்டான். எல்லா புள்ளைகளும் நல்லாயிருக்கணும்ன்னுதான் அப்பாமார்கள் நினைப்பாங்க.
நான் செய்தது தவறு என்று நினைத்தால் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அன்னைக்கே நான் மன்னிப்பு கேட்டுட்டேன். இந்த பேட்டியின் மூலம் இன்னொரு முறை விஜயிடம் மன்னிப்பு கேட்கிறேன். “என்னை மன்னிசிடு”, என்று பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்கும் எஸ்.ஏ.சி-யை விஜய் மனம் இறங்கி மன்னிப்பாரா
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...