மன்னிப்பு கேட்கும் எஸ்.ஏ.சி! - மனம் மாறுவாரா விஜய்
Tuesday March-02 2021

விஜய்யின் பெயரில் அவருடைய அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று கூறிய விஜய், அந்த சம்பவத்தில் இருந்து எஸ்.ஏ.சி-யுடன் பேசுவதில்லை, என்று அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், தான் செய்தது தவறு என்றால் அதற்காக தனது மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்பதாக பேட்டி ஒன்றில் எஸ்.சே.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஒரு அப்பனா சொல்றேன். நான் நடிக்கலை. நடிக்கத் தெரியாது. ஒரு தகப்பனா சொல்றேன். அப்பன் புள்ளைககிட்ட நடிக்க மாட்டான். எல்லா புள்ளைகளும் நல்லாயிருக்கணும்ன்னுதான் அப்பாமார்கள் நினைப்பாங்க.

 

நான் செய்தது தவறு என்று நினைத்தால் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அன்னைக்கே நான் மன்னிப்பு கேட்டுட்டேன். இந்த பேட்டியின் மூலம் இன்னொரு முறை விஜயிடம் மன்னிப்பு கேட்கிறேன். “என்னை மன்னிசிடு”, என்று பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

மன்னிப்பு கேட்கும் எஸ்.ஏ.சி-யை விஜய் மனம் இறங்கி மன்னிப்பாரா

Related News

7354

பாடகி Dhee-யின் ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு!
Wednesday April-22 2026

இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்...

’29’ பட தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்!
Wednesday April-22 2026

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் ( White Carpet Films) திகழ்கிறது...

பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு!
Wednesday April-22 2026

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் ’ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது...

Recent Gallery