விஜய்யின் பெயரில் அவருடைய அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று கூறிய விஜய், அந்த சம்பவத்தில் இருந்து எஸ்.ஏ.சி-யுடன் பேசுவதில்லை, என்று அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில், தான் செய்தது தவறு என்றால் அதற்காக தனது மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்பதாக பேட்டி ஒன்றில் எஸ்.சே.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு அப்பனா சொல்றேன். நான் நடிக்கலை. நடிக்கத் தெரியாது. ஒரு தகப்பனா சொல்றேன். அப்பன் புள்ளைககிட்ட நடிக்க மாட்டான். எல்லா புள்ளைகளும் நல்லாயிருக்கணும்ன்னுதான் அப்பாமார்கள் நினைப்பாங்க.
நான் செய்தது தவறு என்று நினைத்தால் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அன்னைக்கே நான் மன்னிப்பு கேட்டுட்டேன். இந்த பேட்டியின் மூலம் இன்னொரு முறை விஜயிடம் மன்னிப்பு கேட்கிறேன். “என்னை மன்னிசிடு”, என்று பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்கும் எஸ்.ஏ.சி-யை விஜய் மனம் இறங்கி மன்னிப்பாரா
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...