Latest News :

”20 வயதில் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்” - ரெஜினா கேசான்ராவின் கசப்பான அனுபவம்
Wednesday March-03 2021

‘கண்ட நாள் முதல்’ படத்தில் லைலாவுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினா கெசாண்ட்ரா, அப்படத்தை தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அங்கு பிஸியான நடிகையாகவும் வலம் வந்தார்.

 

இதற்கிடையே, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர், அப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். அபப்டத்தை தொடர்ந்து ‘மாநகரம்’, ’ராஜதந்திரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

 

இருப்பினும், அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கவர்ச்சியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரெஜினா, நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ரெஜினா கேசாண்ட்ரா, சினிமாவில் 20 வயதில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

15 வயதில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினாவின் 20 வது வயதில், ஒரு படத்திற்காக பேசிய நபர் ஒருவர், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும், என்று கூறினாராம். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி முழுமையாக அறியாத ரெஜினா, அது பற்றி தனது மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள், என்று பதில் அளித்தாராம். பிறகு தான், அவருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய முழு அர்த்தம் தெரிய வர, அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

 

தனது சினிமா வாழ்வில் இதுபோன்ற கசப்பான அனுபவம் ஒரு முறை தான் நடந்திருக்கிறது. அதன் பிறகு அப்படி ஏதும் நடக்கவில்லை, என்று கூறியிருக்கும் ரெஜினா, சினிமாவில் மட்டும் அல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டால் கூட, அவர் ஒரு கதை சொல்வார், என்றும் கூறியிருக்கிறார்.

Related News

7356

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

47:58 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டு உலக சாதனை படைத்த சீகர் பிக்சர்ஸின் ‘டெவிலன்’!
Sunday June-22 2025

தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...

அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையை பெற்ற ‘புஷ்பா 2’!
Saturday June-21 2025

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...

Recent Gallery