Latest News :

”20 வயதில் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்” - ரெஜினா கேசான்ராவின் கசப்பான அனுபவம்
Wednesday March-03 2021

‘கண்ட நாள் முதல்’ படத்தில் லைலாவுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினா கெசாண்ட்ரா, அப்படத்தை தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அங்கு பிஸியான நடிகையாகவும் வலம் வந்தார்.

 

இதற்கிடையே, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர், அப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். அபப்டத்தை தொடர்ந்து ‘மாநகரம்’, ’ராஜதந்திரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

 

இருப்பினும், அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கவர்ச்சியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரெஜினா, நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ரெஜினா கேசாண்ட்ரா, சினிமாவில் 20 வயதில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

15 வயதில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினாவின் 20 வது வயதில், ஒரு படத்திற்காக பேசிய நபர் ஒருவர், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும், என்று கூறினாராம். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி முழுமையாக அறியாத ரெஜினா, அது பற்றி தனது மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள், என்று பதில் அளித்தாராம். பிறகு தான், அவருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய முழு அர்த்தம் தெரிய வர, அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

 

தனது சினிமா வாழ்வில் இதுபோன்ற கசப்பான அனுபவம் ஒரு முறை தான் நடந்திருக்கிறது. அதன் பிறகு அப்படி ஏதும் நடக்கவில்லை, என்று கூறியிருக்கும் ரெஜினா, சினிமாவில் மட்டும் அல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டால் கூட, அவர் ஒரு கதை சொல்வார், என்றும் கூறியிருக்கிறார்.

Related News

7356

மதுபாலா - இந்திரன்ஸ் நடிக்கும் 'சின்ன சின்ன ஆசை' படத்தின் 2வது போஸ்டர் வெளியானது
Sunday December-07 2025

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...

’த்ரிஷ்யம் 3’ திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ்
Sunday December-07 2025

மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...

’அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் ஐமேக்ஸ் முன்பதிவு தொடங்கியது!
Sunday December-07 2025

இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா அனுபவமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு முக்கிய திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட தொடங்கியுள்ளன...

Recent Gallery