ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை டிரம் ஸ்இக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், குக் வித் கோமாளி புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் 16 ஆம் தேதி முதல் பழனியில் தொடர்கிறது. மேலும், ராமேஸ்வரம், ராம்நாடு, தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளிலும் இப்படத்தின் காட்சிகளை படமாக்க இயக்குநர் ஹரி திட்டமிட்டுள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தற்போது ‘ஏவி 33’ என்று அழைக்கின்றனர். இயக்குநர் ஹரியின் 16 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். எம்.சக்தி வெங்கட் கலையை நிர்மாணிக்க, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...