திரையரங்க உரிமையாளரான திருநாவுக்கரசு என்பவர், நடிகர் விமல் மீது பண மோசடி வழக்கு கூறியதோடு, இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவரது புகார் கடிதம் செய்தியாக வெளியான நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் விமல், தன்னை ஏமாற்றி பணம் பறிக்க பார்க்கிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”என்னை பற்றிய தவறான செய்திகளை சமூக ஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு, அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ஹோலி பண்டிகை தினத்தன்று வெளியிடப்பட்டது...
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் ‘இனிமேல்’ என்ற சுயாதீன வீடியோ பாடல் வெளியாகியுள்ளது...
அறிமுக இயக்குநர் மனோஜ். என்...