பல வகைகளில் காதலை கொண்டாடி வரும் சினிமாவில், “காதல் பொய், காமம் நிஜம்” என்ற மையக்கருவோடு திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது.
ஒளிமார் சினிமாஸ் சார்பில் ஜெ.தனராஜ் கென்னடி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ‘பூம் பூம் காளை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.குஷால் குமார் இயக்கும் இப்படத்தின் கதைப்படி, நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட நினைக்கிறார். ஆனால், நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே, அது நடப்பது எப்போது என அலைபாய்கிறார். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா, இல்லையா என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள்.
நகைச்சுவை நிறைந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் மையக்கரு காதலை பொய் என்றும், காமத்தை நிஜம் என்று சொல்கிறது. சர்ச்சையை கிளப்பும் இப்படி ஒரு கருவை கையில் எடுத்தது பற்றி இயக்குநர் ஆர்.டி.குஷால் குமாரிடம் கேட்ட போது, “காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள், ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும், என்கிறார்.
இதில் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். நாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘சிவலிங்கா’ படத்தில் சக்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் ஆர்.சுந்தராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே.பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பி.ஆர்.ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஞானகரவேல் பாடல்கள் எழுத, யுவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் மார்ச் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...