Latest News :

ஹாலிவுட் கதாநாயகியுடன் ஜோடி போடும் தேஜ்!
Sunday March-14 2021

பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தேஜ். அப்படத்தை தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்ற படத்தில் நடித்திருப்பதோடு, படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

 

தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘ரீவைண்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

’ரீவைண்ட்’ படத்தை தொடர்ந்து இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும் ஃபேன் இந்தியா படம் ஒன்றையும் இயக்கி நடிக்கவுள்ள தேஜ், அப்படத்திற்கு ‘காட்’ என்று தலைப்பு வைத்துள்ளார். ‘குளோரி ஆஃப் டான்’ என்பதற்கான சுருக்கம் தான் காட்.

 

சுமார் ரூ.40 கோடியில் உருவாக உள்ள இப்படம் குறித்து தேஜ் கூறுகையில், “நான்கு வருட இடைவெளியில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ’ரீவைண்ட்’ என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன். கர்நாடகாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.

 

இந்த டைட்டிலை தான், சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் கன்னட ரீமேக்கிற்கு டைட்டிலாக அறிவித்தார்கள். ஆனால் அதே டைட்டிலை, நான் ஏற்கனவே பதிவு செய்து, சென்சார் சான்றிதழ் வாங்கி, ரிலீஸ் வரை வந்துவிட்டேன் என்கிற தகவல், தெரிந்ததும் விட்டுக்கொடுத்து விலகி விட்டார்கள். ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்டிஃபிக் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது. 

 

தற்போது 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன்.

 

கன்னடத்தில் கே.ஜி.எஃப் படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) என்பது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் செட்டாக கூடிய கதையும் டைட்டிலும் எங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பில்லா படத்தை தாண்டிய ஒரு படமாக, அதாவது 2021ல் பில்லா போன்ற ஒரு டான் இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. 

 

இந்த படத்தின் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஹாலிவுட் கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம். தற்போது கன்னடத்தில் ’ராமாச்சாரி 2.O’ என்கிற படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, விரைவில் இந்த படத்தை துவங்க உள்ளேன்.” என்றார்.

Related News

7393

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery