வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சுஜா வாருணி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருமே நடிக்கிறார்கள், என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை எட்ட இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், சுஜா வாருணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சினேகனுக்கு கடுமையான போட்டியாளராக திகழ்ந்த இவருக்கு, மக்களி ஓட்டு குறைவாக கிடைத்ததாலும், சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததாலும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள சுஜா வாருணி, ”பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் எனது நன்றி தெரிவிக்கிறேன். என்னை பற்றி வந்த கிண்டல், மீம்கள் செய்தது எனக்கு ஊக்கத்தை தந்தது. அன்பு காட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.
சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தான். அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. பட்டி, ஹரிஷைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன்.
கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்து பேசும் போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு சிறப்பான தருணம். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வருவதில் மகிழ்ச்சி. உண்மை வெல்லும் என நம்பிக்கை உண்டு. ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...