தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று பேராசிரியை நிர்மலா தேவியின் சம்பவம். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இவருடைய செயல் திடுக்கிட வைத்ததோடு, இவர் பின்னணி குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக கொண்டு படம் ஒன்று உருவாகிறது. ‘எங்க குலசாமி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஆர்யா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்குகிறார். கதாநாயகனாக யூடியுப் புகழ் ‘ராக் ஸ்டார்’ ராஜகுரு நடிக்கிறார்.
பேராசிரியையின் நயவஞ்சக பேச்சில் சிக்கி உயிரிழந்த தன் தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டத்தை ஹீரோ தன் கையிலெடுப்பதே கதையின் கரு. மருத்துவ கல்லூரி பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜீ ஒளிப்பதிவு செய்ய, சாம் டிராஜ் இசையமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘எங்க குலசாமி’ ஏப்ரல் இறுதியில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...