Latest News :

கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு! - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்
Thursday April-08 2021

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு நாளை (ஏப்.09) உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

 

அதில் ஒன்றாக, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக ‘கர்ணன்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்ற தகவல் பரவ தொடங்கிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

 

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன், என்று தெரிவித்துள்ளார்.

 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, கடல் நடுவே ‘கர்ணன்’ படத்தின் பேனர் வைப்பது, திரையரங்குகளில் 50 அடிக்கு மேல் உயரமுள்ள பேனர் வைப்பது என கொண்டாடி வருகிறார்கள்.

Related News

7451

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

47:58 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டு உலக சாதனை படைத்த சீகர் பிக்சர்ஸின் ‘டெவிலன்’!
Sunday June-22 2025

தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...

அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையை பெற்ற ‘புஷ்பா 2’!
Saturday June-21 2025

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...

Recent Gallery