Latest News :

கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு! - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்
Thursday April-08 2021

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு நாளை (ஏப்.09) உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

 

அதில் ஒன்றாக, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக ‘கர்ணன்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்ற தகவல் பரவ தொடங்கிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

 

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன், என்று தெரிவித்துள்ளார்.

 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, கடல் நடுவே ‘கர்ணன்’ படத்தின் பேனர் வைப்பது, திரையரங்குகளில் 50 அடிக்கு மேல் உயரமுள்ள பேனர் வைப்பது என கொண்டாடி வருகிறார்கள்.

Related News

7451

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery