கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான ‘கர்ணன்’ படத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா பரவலால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா? என்ற கேள்வியை உடைத்தெரிந்து முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் சுமார் ரூ.10 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘கர்ணன்’ படக்குழு மட்டும் இன்றி தமிழ் திரையுலகமே உற்சாகமடைந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு விதித்த கட்டுப்பாட்டினால் நேற்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். இது திரையுலகினரிடம் சற்று கலக்கத்தை ஏற்படுத்தினாலும், கர்ணன் படத்தின் முதல் நாள் வசூலையும், படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் வைத்து பார்க்கும் போது 50 சதவீத இருக்கைகளும் நிரம்பி விடும் என்பதால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
கொரோனா பிரச்சனையால் நீண்ட காலமாக பிரச்சனையில் சிக்கி தவித்த திரையுலகுக்கு விஜயின் ‘மாஸ்டர்’ பெரும் நம்பிக்கை கொடுத்த நிலையில், தற்போது ‘கர்ணன்’ திரைப்படம் புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...