கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான ‘கர்ணன்’ படத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா பரவலால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா? என்ற கேள்வியை உடைத்தெரிந்து முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் சுமார் ரூ.10 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘கர்ணன்’ படக்குழு மட்டும் இன்றி தமிழ் திரையுலகமே உற்சாகமடைந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு விதித்த கட்டுப்பாட்டினால் நேற்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். இது திரையுலகினரிடம் சற்று கலக்கத்தை ஏற்படுத்தினாலும், கர்ணன் படத்தின் முதல் நாள் வசூலையும், படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் வைத்து பார்க்கும் போது 50 சதவீத இருக்கைகளும் நிரம்பி விடும் என்பதால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
கொரோனா பிரச்சனையால் நீண்ட காலமாக பிரச்சனையில் சிக்கி தவித்த திரையுலகுக்கு விஜயின் ‘மாஸ்டர்’ பெரும் நம்பிக்கை கொடுத்த நிலையில், தற்போது ‘கர்ணன்’ திரைப்படம் புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...