திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சிம்புவின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்க சிலர் கூறி வருகிறார்கள். குறிப்பாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபட்டு கொண்டிருக்கும் சிம்பு, முன்பை போல் பார்ட்டி உள்ளிட்ட எந்த விஷயத்திற்காகவும் வெளியே செல்வதில்லை என்றும், படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீடு வந்து சேருபவர், அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிம்புவை பற்றி இப்படி ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் வேறு ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, காதல் தோல்விகளால் இனி காதலே வேண்டாம், என்று கூறி வந்த சிம்பு, இளம் நடிகை ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அந்த வாரிசு நடிகையுடன் சிம்பு நெருக்கம் காட்டுவதாகவும், தனது வீட்டுக்கே அந்த நடிகையை சிம்பு அழைத்து வந்து அன்பு காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
சிம்புக்கு திருமணமாகவில்லையே, என்று அவரது பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சிம்புவின் புதிய காதல் விவகாரம் கசிந்திருப்பது கோலிவுட்டில் சற்று சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...