ஏ.ஆர்.முருகதாஸ் என்ற முன்னணி இயக்குநரின் லேபிலோடு வெளியாக உள்ள மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ நேரடி தமிழ்ப் படம் என்று அப்படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் கூறி வரும் நிலையில், ஸ்பைடர் படத்தை தெலுங்கு டப்பிங் பட்மாகவே ரசிகர்கள் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், தமிழக ரசிகர்களிடம் நன்றாக பரிச்சியம் ஆனா ராணா உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் நடித்த படங்களே தமிழகத்தில் வியாபார ரீதியாக பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தை லைகா ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த 21 கோடி ரூபாயில் ஒரு கோடியை வசூலிப்பதே பெரும் சிரமம் தான் என்று தமிழ் சினிமாவின் வியாபாரிகள் சிலர் கூறுகிறார்கள்.
மேலும், மகேஷ் பாபு தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக களம் இறங்குவது போன்று விளம்பரங்கள் செய்யப்பட்டதோடு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆடியோ ரிலீஸ் விழாவில், கூட்டத்தை கூட்டி, மகேஷ் பாபுவுக்கு தமிழகத்தில் அதிக மாஸ் இருப்பது போல காட்டினார்களாம். இத்தகைய நடவடிக்கையால் சூர்யா, அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்திருப்பதோடு, ஸ்பைடர் தொடர்பான பப்ளிசிட்டி அனைத்தும் அப்படத்திற்கு நெகட்டிவாக அமைந்திருக்கிறதாம்.
அஜித், விஜயகாந்த், விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களை மட்டுமே இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு என்று தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க ரசிகர் கூட்டம் இல்லை என்பதால், மகேஷ் பாபு தெலுங்கு நடிகர் என்பதாலும் ‘ஸ்பைடர்’ படம் தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருப்பதோடு, நேரடி தமிழ் படங்களே வசூலில் இங்கு தடுமாறிக் கொண்டிருக்கையில் ஸ்பைடர் வசூலில் சாதிக்குமா? என்பதே வியாபார வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...