வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் தனி இசை பாடல்கள் பிரபலமாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான சில தமிழ் இசை தனிப்பாடல்கள் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தனி இசைப்பாடலாக உருவாகியுள்ள முருகக் கடவுளைப் பற்றிய ஆன்மீக பாடலான “கம்...கம்...முருகா....” பாடல் வெளியான சில மணி நேரங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழர்களின் கடவுளான முருகப் பெருமானின் இந்த பாடல், ஆங்கில வார்த்தை மூலம் ஆரம்பமானாலும், முருகனின் வீரம், தீரத்திற்கு ஏற்ற வகையில் இசையும், வரிகளும் அமைந்திருப்பது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இசையமைப்பாளர் குமார் நாராயணன் இசையமைத்திருப்பதோடு, ஜெகன் கல்யாண், சஜன் ஷெனாய் ஆகியோருடன் இணைந்து பாடல் வரிகளை எழுதி, பாடியுள்ளார்.
குமார் நாராயணன், ஜெகன் கல்யாண், சஜன் ஷெனாய் ஆகியோரின் வரிகள் மற்றும் குரலில், குமார் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலின் காட்சிகளை அந்தோணி வின்செண்ட் ரூத் படமாக்கியுள்ளார்.
செயிண்ட்யூன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் மிக்ஸிங் மற்றும் மாஸ்ட்ரேட் செய்யப்பட்டுள்ள ”கம்...கம்...முருகா...” வீடியோ இசை ஆல்பம் பாடல், தொழில்நுட்ப ரீதியாகவும், மக்களின் உணர்வுப்பூர்வமான ஆன்மீக பாடலாகவும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...