சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருவதும், இப்படம் பல பிரச்சனைகளை கடந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டதும் அனைவரும் அறிந்தது தான். அதேபோல், இப்படம் குறித்து அவ்வபோது சில சர்ச்சையான தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பதும், அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளிப்பதும் வழக்கமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
அதன்படி, தற்போது ஒரு சர்ச்சையான சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த ‘மாநாடு’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு மாலத்தீவில் நடத்த இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு இல்லாமல், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனுடன் லொக்கேஷன் பார்ப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் ஒளிப்பதிவாளருடன் மாலத்தீவுக்கு செல்லும் புகைப்படம் ஒன்றை தனது வாட்ஸ்-அப் டிபியில் வைத்திருந்தார்.
ஒரு படத்திற்கான லொக்கேஷனை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இணைந்து தேர்வு செய்வது தான் வழக்கம். ஆனால், இங்கு அப்படி இல்லாமல், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இல்லாமல் ஒளிப்பதிவாளருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்றிருப்பதால், ‘மாநாடு’ படத்தில் ஏதோ விவகாரம் தொடர்ந்துக் கொண்டு இருக்குமோ, என்ற சந்தேகம் எழுகிறது.
அதே சமயம், சுரேஷ் காமாட்சி அடுத்ததாக இயக்குநர் ராம் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக லொக்கேஷன் பார்க்க சென்றிருக்கலாம், என்றும் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும், இயக்குநர் ராமும் தானே சென்றிருக்க வேண்டும்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...