சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருவதும், இப்படம் பல பிரச்சனைகளை கடந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டதும் அனைவரும் அறிந்தது தான். அதேபோல், இப்படம் குறித்து அவ்வபோது சில சர்ச்சையான தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பதும், அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளிப்பதும் வழக்கமாக நடந்துக் கொண்டிருக்கிறது.
அதன்படி, தற்போது ஒரு சர்ச்சையான சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த ‘மாநாடு’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு மாலத்தீவில் நடத்த இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் வெங்கட் பிரபு இல்லாமல், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனுடன் லொக்கேஷன் பார்ப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அவர் ஒளிப்பதிவாளருடன் மாலத்தீவுக்கு செல்லும் புகைப்படம் ஒன்றை தனது வாட்ஸ்-அப் டிபியில் வைத்திருந்தார்.

ஒரு படத்திற்கான லொக்கேஷனை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இணைந்து தேர்வு செய்வது தான் வழக்கம். ஆனால், இங்கு அப்படி இல்லாமல், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இல்லாமல் ஒளிப்பதிவாளருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சென்றிருப்பதால், ‘மாநாடு’ படத்தில் ஏதோ விவகாரம் தொடர்ந்துக் கொண்டு இருக்குமோ, என்ற சந்தேகம் எழுகிறது.
அதே சமயம், சுரேஷ் காமாட்சி அடுத்ததாக இயக்குநர் ராம் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக லொக்கேஷன் பார்க்க சென்றிருக்கலாம், என்றும் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும், இயக்குநர் ராமும் தானே சென்றிருக்க வேண்டும்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...