அறிமுக இயக்குநர் ஏ.மணிவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் படம் ‘பகையே காத்திரு’. கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராசி முத்துசாமி மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்முருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் ஆகியோர் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிவா ஷாரா, பாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் இப்படம், அவருடைய சினிமா வாழ்க்கையில் மாறுபட்ட படமாகவும், ஆக்ஷன் திரில்லர் நிரைந்த சமூக படமாகவும் உருவாகிறது.
செல்வகுமார்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். எம்.சிவா யாதவ் கலையை நிர்மாணிக்க, ராஜா முஹமது படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஏ.ஜெய்சம்பத் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார். லைன் புரொடியூசராக செல்வக்குமார்.எஸ் பணியாற்றுகிறார்.
’காக்கி’ எனும் குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற ஏ.மணிவேல் இயக்கும் முதல் திரைப்படமான ‘பகையே காத்திரு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ள நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்புகளை கொச்சின், ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...