அறிமுக இயக்குநர் ஏ.மணிவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் படம் ‘பகையே காத்திரு’. கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராசி முத்துசாமி மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்முருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் ஆகியோர் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிவா ஷாரா, பாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் இப்படம், அவருடைய சினிமா வாழ்க்கையில் மாறுபட்ட படமாகவும், ஆக்ஷன் திரில்லர் நிரைந்த சமூக படமாகவும் உருவாகிறது.
செல்வகுமார்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். எம்.சிவா யாதவ் கலையை நிர்மாணிக்க, ராஜா முஹமது படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஏ.ஜெய்சம்பத் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார். லைன் புரொடியூசராக செல்வக்குமார்.எஸ் பணியாற்றுகிறார்.

’காக்கி’ எனும் குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற ஏ.மணிவேல் இயக்கும் முதல் திரைப்படமான ‘பகையே காத்திரு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ள நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்புகளை கொச்சின், ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...