தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக், திடீர் உடலக்குறைவால் இன்று காலை சுமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவின்றி அவர் இருந்ததால், அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தன் அவருக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலால் தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி மருத்துவத்துறையிலும், மக்களிடமும் பெரும் பதற்றம் அதிகரித்தது. ஆனால், விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கபடவில்லை.
இந்த நிலையில், சுமார் மாலை 5.30 மணியளவில் விவேக் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை தரப்பில், விவேக் உடல் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த விளக்கத்தில், ”நடிகர் பத்மஸ்ரீ விவேக் இன்று காலை 11 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரால் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தனர். பின் அவருக்கு ஆஞ்சியோகிராம் தொடர்ந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் உள்ளார். எக்மோ கருவி உதவியுடன் இருக்கிறார். இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென்று நின்றதால் ஏற்பட்ட பிரச்சினை இது. இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...