நடிகர் விவேக் கடந்த 17 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்தார். அவருடைய இறப்பு திரையுலகை மட்டும் இன்றி பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையொட்டி, அவர் முன்னெடுத்த ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தற்போது பல சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், நடிகர் விவேக்கின் மறைவுக்கு படப்பிடிப்பு தளங்களிலும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ’கும்பாரி’ திரைப்பட குழுவினர் தங்களது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விவேக்கிற்கு தீபம் ஏற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
குமார் தாஸ் தயாரிப்பில் அபி சரவணன், மஹானா மற்றும் சாம்ஸ் நடிப்பில் இயக்குந கெவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’கும்பாரி’. இப்படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘கும்பாரி’ படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நாயகன் அபி சரவணன், நாயகி மஹானா, இயக்குநர் கெவின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...