மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சாதி ரீதியிலான அடக்குமுறை மற்றும் தமிழகத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜும், நடிகர் தனுஷும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும், என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...