ஒவியா, அஞ்சலி, விமல், சிவா ஆகியோரது நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கலகலப்பு 2’ என்ற தலைப்பில் சுந்தர்.சி இயக்க உள்ளார்.
இதில், சிவா - ஜெய் ஆகியோர் நடிக்க உள்ள நிலையில், ஓவியாவை இதில் நடிக்க வைக்க சுந்தர்.சி விரும்பியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ள ஓவியா நடித்தால் படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என்பதால், ஓவியாவை சுந்தர்.சி அனுக, ஆனால் ஓவியாவோ நடிக்க மறுத்துவிட்டாராம். அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதை கொடுக்க சுந்தர்.சி தயாராக இருந்த போதிலும், ஓவியா நோ சொல்லிவிட்டாராம்.
எதற்காக ஓவியா, கலகலப்பு 2-வில் நடிக்க மறுத்தார் என்பது குறித்து விசாரிக்கையில், சுந்தர்.சி அவரை கவர்ச்சியில் உறித்தெடுக்க நினைத்தாராம். ஏற்கனவே கலகலப்பு படத்தின் பாடல்களில் ஓவியாவை ரொம்ப கவர்ச்சியாக காட்டிய சுந்தர், இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று ஓவியாவிடம் சொன்னாராம்.
தற்போது பிக் பாஸ் மூலம், மக்களின் அன்பை பெற்றுள்ள ஓவியா, அவர்களிடம் உள்ள நன்மதிப்பை கெடுத்துக்கொள்ள விரும்பாததால் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதனால் தான் சுந்தர்.சி-க்கு நோ சொல்லிவிட்டாராம்.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...