முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இந்திய திரையுலகில் முத்திரை பதிக்கும் வகையில், முதன் முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராட்சச குரங்கை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.இராமசாமி தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கவுசிக்கரா, என்.இராமசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தின் கதை எழுத, கோகுல்ராஜ் பாஸ்கர் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அரவிந்த்சிங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் நூற்றுக்கும் அதிகமான கணிணி வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளை நடிக்க வைத்து பெரும் வெற்றிக்கண்டவர் மறைந்த இயக்குநர் இராம.நாராயணன், அவருடைய நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்திய திரையுலகில் முத்திரை பதிக்கும் வகையில், தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான ராட்சச குரங்குப் படமான ‘கபி’ படத்தின் தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...