கொரோனாவில் இரண்டாம் அலை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் பல மாநிலங்களை உலுக்கு எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, உயிர் பலியும் அதிகரித்து வருவது மக்களை பெரும் அச்சமடைய செய்துள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் தாமிரா, இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், இயக்குநர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா முதல் முறையாக இணைந்து நடித்த ‘ரெட்டசுழி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாமிரா, இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் பிக் பாஸ் ரம்யா பாண்டியன் நடித்த ‘ஆண்தேவை’ என்ற படத்தை இயக்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் தாமிராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இயக்குநர் தாமிராவின் இயற்பெயர் சேக்தாவூத் என்பதாகும். 53 வயதாகும் அவருக்கு பஷிரியா என்ற மனைவியும், முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான் ஆகிய மூன்று மகன்களும், பவ்ஷியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இயக்குநர் தாமிராவின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்க செய்யப்பட உள்ளது.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...