தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘பாம்பாட்டம்’. வி.சி.வடிவுடையான் எழுதி இயக்கும் இப்படத்தை வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, ‘ஓரம் போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார்.
ஜீவன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக ரித்திகா சென் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிக்க, இளவரசி நாகமதி என்ற மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர்களுடன் சுமன், சரவணன், ரமேஷ்கண்ணா, வெங்கட் என ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், ஷெராவத் நடிக்கும் இளவரசி நாகமதியின் லுக் போஸ்டரை ’பாம்பாட்டம்’ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்று பின்னணி கொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் பாணியில் கையாளப்படும் கதை, என்பதால் பெரும் பொருட்செலவில் செட்டுகள் அமைத்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கும் மிக முக்கியம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது.
இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா ஆகியோர் பாடல்கள் எழுத, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். ஏ.பழனிவேல் கலையை நிர்மாணிக்க, சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தினேஷ், சிவசங்கர் ஆகியோர் நடனத்தை வடிவமைக்க, இணை தயாரிப்பாளராக பண்ணை ஏ.இளங்கோ பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணியை மணவை புவன் கவனிக்கிறார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...