பிரபல ஒளிப்பதிவாளரும், திரைப்பட இயக்குநருமான கே.வி.ஆனந்த் திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
பத்திரிகைத்துறையில் புகைப்பட நிருபராக தனது பணியை தொடங்கிய கே.வி.ஆனந்த், பிறகு பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், மோகான்லால் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ’தென்மாவின் கொம்பத்’ என்ற மலையாள திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், தமிழில் ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர், ‘முதல்வன்’, ‘சிவாஜி’ என பல பிரம்மாண்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அப்படத்தை தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ’மாற்றான்’, ‘அநேகன்’, ‘கவன்’, ‘காப்பான்’ ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த கே.வி.ஆனந்த், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...