இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. சாமாணிய மக்கள் முதல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே, சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்ட தோடு, மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவலால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டாலும், சில முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா ஊரடங்கு, தங்களுடைய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதற்கான விடுமுறையாகவே அமைந்தது. மேலும், சில நடிகர் நடிகைகள் தங்களுடைய குடும்பத்துடன் எப்படி நேரத்தை செலவிடுகிறோம், என்பதை தினமும் வீடியோவாக வெளியிட்டு, பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களை கடுப்பேற்றவும் செய்தார்கள்.
இப்படி கொரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சில சினிமா நடிகர், நடிகைகள் தேவையான அத்தியாவாசிய பொருட்களை வீடுகளில் சேமித்து வைத்துக் கொண்டு, தாங்களும் வீட்டை தவிர வேறு எங்கும் செல்லாமல் இருக்கிறார்கள். இப்படி வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் இவர்களையும் கொரோனா தாக்குவது எப்படிதான் என்பது இதுவரை தெரியவில்லை.
அந்த வகையில், நடிகை ஆண்டியா கூடா வீட்டில் தான் பாதுகாப்பாக இருந்தார். ஆனால், அவரையும் கொரோனா தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...