இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. சாமாணிய மக்கள் முதல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே, சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்ட தோடு, மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவலால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டாலும், சில முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா ஊரடங்கு, தங்களுடைய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதற்கான விடுமுறையாகவே அமைந்தது. மேலும், சில நடிகர் நடிகைகள் தங்களுடைய குடும்பத்துடன் எப்படி நேரத்தை செலவிடுகிறோம், என்பதை தினமும் வீடியோவாக வெளியிட்டு, பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களை கடுப்பேற்றவும் செய்தார்கள்.
இப்படி கொரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சில சினிமா நடிகர், நடிகைகள் தேவையான அத்தியாவாசிய பொருட்களை வீடுகளில் சேமித்து வைத்துக் கொண்டு, தாங்களும் வீட்டை தவிர வேறு எங்கும் செல்லாமல் இருக்கிறார்கள். இப்படி வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் இவர்களையும் கொரோனா தாக்குவது எப்படிதான் என்பது இதுவரை தெரியவில்லை.
அந்த வகையில், நடிகை ஆண்டியா கூடா வீட்டில் தான் பாதுகாப்பாக இருந்தார். ஆனால், அவரையும் கொரோனா தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...
நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...
கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...