இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. சாமாணிய மக்கள் முதல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே, சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்ட தோடு, மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவலால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டாலும், சில முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா ஊரடங்கு, தங்களுடைய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதற்கான விடுமுறையாகவே அமைந்தது. மேலும், சில நடிகர் நடிகைகள் தங்களுடைய குடும்பத்துடன் எப்படி நேரத்தை செலவிடுகிறோம், என்பதை தினமும் வீடியோவாக வெளியிட்டு, பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களை கடுப்பேற்றவும் செய்தார்கள்.
இப்படி கொரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சில சினிமா நடிகர், நடிகைகள் தேவையான அத்தியாவாசிய பொருட்களை வீடுகளில் சேமித்து வைத்துக் கொண்டு, தாங்களும் வீட்டை தவிர வேறு எங்கும் செல்லாமல் இருக்கிறார்கள். இப்படி வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் இவர்களையும் கொரோனா தாக்குவது எப்படிதான் என்பது இதுவரை தெரியவில்லை.
அந்த வகையில், நடிகை ஆண்டியா கூடா வீட்டில் தான் பாதுகாப்பாக இருந்தார். ஆனால், அவரையும் கொரோனா தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...