இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. சாமாணிய மக்கள் முதல், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரே, சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்ட தோடு, மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவலால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டாலும், சில முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா ஊரடங்கு, தங்களுடைய குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதற்கான விடுமுறையாகவே அமைந்தது. மேலும், சில நடிகர் நடிகைகள் தங்களுடைய குடும்பத்துடன் எப்படி நேரத்தை செலவிடுகிறோம், என்பதை தினமும் வீடியோவாக வெளியிட்டு, பொருளாதார ரீதியாக கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களை கடுப்பேற்றவும் செய்தார்கள்.
இப்படி கொரோனா பரவலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சில சினிமா நடிகர், நடிகைகள் தேவையான அத்தியாவாசிய பொருட்களை வீடுகளில் சேமித்து வைத்துக் கொண்டு, தாங்களும் வீட்டை தவிர வேறு எங்கும் செல்லாமல் இருக்கிறார்கள். இப்படி வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் இவர்களையும் கொரோனா தாக்குவது எப்படிதான் என்பது இதுவரை தெரியவில்லை.
அந்த வகையில், நடிகை ஆண்டியா கூடா வீட்டில் தான் பாதுகாப்பாக இருந்தார். ஆனால், அவரையும் கொரோனா தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...