ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘எனிமி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் மிருனாளினி நாயகியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், விஷாலின் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஷாலின் 31 வது படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்குகிறார். இவர் பல விருதுகளை வென்ற ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கியவர் ஆவார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம், அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன், என்ற கருவை மையமாக வைத்து உருவாக உள்ளது.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய மற்ற விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...