இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய படுக்கை, மருந்து, ஆக்சிஜன் வசதிகள் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது பிணங்களை அடக்கம் செய்ய சுடுகாடுகளில் இடம் இல்லை, என்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தாலும், கொரோனவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும், திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதோடு, உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரிப்பதால் தமிழ் திரையுலகினர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் பலியான நிலையில், சூர்யாவின் ‘கஜினி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், கொரோனவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரத் நடித்த ’பிப்ரவரி 14’, ‘கில்லாடி’, சூர்யா நடித்த ‘கஜினி’, தனுஷ் நடித்த ‘சுள்ளான்’, விஜயகாந்த் நடித்த ‘சபரி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...