கொரோனவால் பாதிக்கப்படும் நடிகர்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் மாறன் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வருபவர் மாறன். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், விஜயின் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அப்படத்தை தொடர்ந்து ‘மாநகரம்’, ‘டிஷ்யூம்’, ‘பட்டாசு’, ‘தலைநகரம்’, ’வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் மாறனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

48 வயதாகும் மாறன் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி, மேடை கச்சேரிகளில் கானா பாடல்களும் பாடி வந்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...