சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பூர்ணா தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், அவர் வில்லியாக நடித்த தெலுங்கு படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘பவர் ப்ளே’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம், பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
நாயகன் ஒருநாள் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்கிறான், வெளிவந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அவனிடம் வந்தவை போலியான ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இதன் பின்னே ஏதோ சதி இருப்பதாக உணர்கிறான். இதற்குக் காரணமாக யாரோ அதிகாரம் படைத்தவர்கள் தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான்.
ஏடிஎம் மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகப் பல ஏஜென்சிகள் உள்ளன. அவர்கள் செய்த சதியால் தான் இவ்வாறு போலி ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டது என்று தெரிகிறது. அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போராடுகிறான் என்பது தான் 'பவர் ப்ளே'. மீள்வதற்கான அவனது போராட்டங்களைப் பரபரப்பான காட்சிகளோடு படமாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி வெற்றி கண்டவர். வனமாலி கிரியேஷன்ஸ் பி.லிட் சார்பில் மகேந்தர், தேவேஷ் தயாரித்துள்ளனர்.
இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பரிச்சயமான பூர்ணா முக்கியமான வில்லி பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். பூர்ணாவுக்கு நடிப்பில் இன்னொரு முகத்தைக் காட்டும் வாய்ப்பு. கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர். மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ், அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு ஆண்ட்ரூ, இசை சுரேஷ் பொப்பிலி,எடிட்டிங் பிரவின் புடி, சண்டை இயக்கம் ரியல் சதீஷ் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.
'பவர் ப்ளே' இந்த தலைப்பு ஏன் என்றால் எவ்வளவு பவர் வாய்ந்த அதிகாரம் மிக்கவர்கள் தங்கள் பவரை வைத்து எப்படியான செயல்களையெல்லாம் செய்கின்றனர் என்பதைக் காட்டுவதால் தான் இந்த தலைப்பு என்கின்றனர் படக்குழுவினர்.
ஏற்கனவே தெலுங்கு மற்றும் இந்தியில் ஒடிடி தளத்தில் வெளியான இப்படம் தற்போது தமிழில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...