சுதந்திர போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 95. அவருடைய இறப்புக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், துளசி அய்யா வாண்டையார் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”ஐயா, துளசி அய்யா வாண்டையாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
சுதந்திர போராட்டத்திற்காக போராடியவர், டெல்டா மாவட்ட மக்களின் கல்விக்காகவும் தொடருந்து உழைத்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், எம்.பி-யாகவும் சிறப்பாக செயலாற்றியவர், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளராக இருந்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கினார்.
பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகியவராக இருந்தாலும், தனது எளிமையான வாழ்க்கை முறை மூலமாகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். ஐயா நம்மை விட்டு பிரிந்தாலும், அவருடைய சாதனைகள் மூலம் என்றுமே நம் மனதில் நிலைத்திருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...