கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர்கள் பலர் உயிரிழந்து வரும் நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் மனைவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவமும், அந்த தற்கொலை அந்த நடிகர் தான் காரணம், என்று அவருடைய மனைவியின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்திருப்பதும், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் உன்னி தேவ். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மனைவியை உன்னி தேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் உன்னி தேவ் மீது போலீசில் புகார் அளித்த பிரியங்கா, கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக, புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26.
பிரியங்கா உடலை பார்த்து கதறி அழுத அவரது பெற்றோர்கள், பிரியங்கா உடலில் காயம் உள்ளது. உன்னி தேவ் அடித்து துன்புறுத்தியதால் தான் இறந்துள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், பிரியங்காவின் நகைகளை உன்னி தேவ் விற்று செலவு செய்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...