கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இதற்கிடையே கொரோனாவால் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மரணமடைந்து வருவது பெரும் அதிர்ச்சியளித்து வரும் நிலையில், பிரபல இயக்குநரின் குடும்பத்தில் கொரோனா கோரதாண்டவம் ஆடிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
‘மேயாதமான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பாலை வைத்து ‘ஆடை’ என்ற படத்தை இயக்கிய ரத்னகுமார், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியதோடு, அப்படத்தின் வசனத்தையும் எழுதினார்.
இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் குடும்பத்தில் உள்ள 18 மாத குழந்தை முதல் 83 வயதுடைய மூதாட்டி வரை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்கள், தற்போது தான் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்களாம்.
இந்த தகவலை தெரிவித்திருக்கும் இயக்குநர் ரத்னகுமார், அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும்படியும் கேட்டுகொண்டுள்ளார்.
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...