கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இதற்கிடையே கொரோனாவால் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மரணமடைந்து வருவது பெரும் அதிர்ச்சியளித்து வரும் நிலையில், பிரபல இயக்குநரின் குடும்பத்தில் கொரோனா கோரதாண்டவம் ஆடிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
‘மேயாதமான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பாலை வைத்து ‘ஆடை’ என்ற படத்தை இயக்கிய ரத்னகுமார், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியதோடு, அப்படத்தின் வசனத்தையும் எழுதினார்.

இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் குடும்பத்தில் உள்ள 18 மாத குழந்தை முதல் 83 வயதுடைய மூதாட்டி வரை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்கள், தற்போது தான் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்களாம்.
இந்த தகவலை தெரிவித்திருக்கும் இயக்குநர் ரத்னகுமார், அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும்படியும் கேட்டுகொண்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...