Latest News :

பிரபல இயக்குநர் வீட்டில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா!
Monday May-31 2021

கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

 

இதற்கிடையே கொரோனாவால் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மரணமடைந்து வருவது பெரும் அதிர்ச்சியளித்து வரும் நிலையில், பிரபல இயக்குநரின் குடும்பத்தில் கொரோனா கோரதாண்டவம் ஆடிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

 

‘மேயாதமான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பாலை வைத்து ‘ஆடை’ என்ற படத்தை இயக்கிய ரத்னகுமார், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியதோடு, அப்படத்தின் வசனத்தையும் எழுதினார்.

 

Director Rathnakumar

 

இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் குடும்பத்தில் உள்ள 18 மாத குழந்தை முதல் 83 வயதுடைய மூதாட்டி வரை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்கள், தற்போது தான் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்களாம்.

 

இந்த தகவலை தெரிவித்திருக்கும் இயக்குநர் ரத்னகுமார், அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும்படியும் கேட்டுகொண்டுள்ளார்.

Related News

7547

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...