தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இன்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்களைப் போல் வரலட்சுமியும் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது, சொந்த ஊர்களுக்கு சென்ற வட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி சேவை செய்த வரலட்சுமி, தற்போது ஒரு நாய்க்கு தாயாகியுள்ளார்.
ஆம், தான் வாங்கிய நாய் குட்டி ஒன்றை, தனது மகன் என்று கூறி சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியிருக்கும் நடிகை வரலட்சுமி, அந்த நாய்க்கு ஒரு பெயர் வைத்ததோடு, அந்த பெயரில் சமூக வலைதளப் பக்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...