தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இன்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்களைப் போல் வரலட்சுமியும் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது, சொந்த ஊர்களுக்கு சென்ற வட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி சேவை செய்த வரலட்சுமி, தற்போது ஒரு நாய்க்கு தாயாகியுள்ளார்.
ஆம், தான் வாங்கிய நாய் குட்டி ஒன்றை, தனது மகன் என்று கூறி சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியிருக்கும் நடிகை வரலட்சுமி, அந்த நாய்க்கு ஒரு பெயர் வைத்ததோடு, அந்த பெயரில் சமூக வலைதளப் பக்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...