கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் திரைப்பட மற்றும் நாடக துணை நடிகர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி,முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பகுதி பகுதியாக நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.
பூச்சி எஸ்.முருகனின் முயற்சியால் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ முன்வந்தார். இதையடுத்து, இன்று, பூச்சி முருகன் முன்னிலையில், தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
100க்கு மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.உடன் தயாரிப்பாளர் சாதிக், நடிகர் முத்து உள்ளிட்டவர்கள் இருந்தார்கள்.
மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாளையொட்டி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 100 தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சிங்காரவடிவேலன் நிதி உதவியை வழங்கினார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...