தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா, தமிழ் சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகி பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்தவர் தற்போது தெலுங்கு நடிகை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் செட்டிலானவர், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, சமந்தா நடிப்பில் உருவான ’தி பேமிலி மேன் 2’ வெப் தொடர், தமிழர்களை இழிவாக சித்தரித்திருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தியிருப்பதாகவும் கூறி தமிழ் உணர்வாளர்கள் அத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடரை நிறுத்த வேண்டும், என்று மத்திய அரரை வலியுறுத்தினார்கள்.
ஆனால், தமிழர்களின் குரலை தமிழக அரசு புரம் தள்ளியதால், தி பேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியானது. தொடர் வெளியான பிறகும் அத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், அமேசான் நிறுவனத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படும், என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், தமிழர்களை இழிவாக காட்ட வேண்டும், என்பதற்காகவே தி பேமிலி மேன் 2 தொடர் கதையை எழுதியிருக்கும் வட இந்தியர்கள் இரு பக்கம் இருந்தாலும், தொடரில் நடித்த சமந்தா, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல், தொடர் குறித்து பெறுமையாக பேசிக்கொண்டிருக்கிறார். இதனால், சமந்தாவை இனி தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க கூடாது, என்ற எதிர்ப்பு முழக்கங்களும் தமிழகத்தில் ஒலித்து வருகிறது.
இந்த நிலையில், தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடிப்பதற்காக சமந்தாவுக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக திரைப்படங்களில் நடிக்க சமந்தா ரூ.1 முதல் ரூ.1.30 கோடி சம்பளமாக பெறுவாராம். ஆனால், இந்த வெப் தொடருக்கு அவருக்கு மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் சமந்தா, தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிராக தமிழர்கள் குரல் கொடுத்தையும், தமிழர்கள் பற்றியும் கண்டுக்கொள்ளவில்லை, என்று கூறப்படுகிறது.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...