திரைப்படங்களில் நடித்து நடிகைகள் பிரபலமாவது ஒரு பக்கம் இருந்தாலும், சோசியல் மீடியாவில் வெளியிடப்படும் தங்களது புகைப்படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகி அதன் மூலம் பட வாய்ப்புகள் பெறுவது தான் தற்போதைய தமிழ் சினிமாவின் புதிய டிரெண்டாகியுள்ளது.
அந்த வகையில், நடிகை ரம்யா பாண்டியன் தனது இடுப்பழகை காட்டி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சில டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட வாய்ப்புகளை பெற்றார் என்பது அனைவரும் அறிந்தது தான். அவரைப் போல் பல நடிகைகளும் புகைப்படங்கள் வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், விதவிதமான புகைப்படங்கள் வெளியிடும் நடிகைகளிள் ஒருவரான சுபிக்ஷா, தனது புதிய புகைப்படங்களை வெளியிட, அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

’கடுகு’, ‘கோலிசோடா 2’, ‘வேட்டை நாய்’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கும் சுபிக்ஷா, தமிழ் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, ‘யார் இவர்கள்’, ’கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களில் நடித்து வரும் சுபிக்ஷா, தனது தொடை அழகை காட்டியவாறு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்று வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை லைக் பண்ணும் ரசிகர்கள் கூடவே, தொடை அழகி ரம்பாவின் இடத்தை பிடிக்க சுபிக்ஷா பிளான் போட்டுவிட்டார், என்று கமெண்டும் போடுகிறார்கள்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...