கொரோனா 2வது அலை மூலம் தமிழகத்தில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், திரையுலகினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதற்கிடையே, சினிமா படப்பிடிப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், சீரியல் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதன் மூலம் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழத் திரைப்படங்களிலும், பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் கவிதாவின் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
’ஆட்டுக்கார அலமேலு’, ‘நாடோடித் தென்றல்’, ‘அமராவதி’ போன்ற படங்கள் மூலம் பிரபலமான கவிதா, தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடிப்பதோடு, ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது 'நந்தினி’, ’என்றென்றும் புன்னகை’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இவரது மகனின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த கொரோனா காலத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் வீட்டில் இருந்த கவிதா, தற்போதைய இரண்டாவது அலையின் போது, சீரியல் படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டதால் தான், கொரோனா தொற்றுக்கு அவரது குடும்பம் ஆளானதாக கூறப்படுகிறது.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...