தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் லைகா புரொடக்ஷன்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருவதோடு, அறிமுக இயக்குநர்கள் மற்றும் வளர்ந்து வரும் நாயகர்களை வைத்தும் திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், இயக்குநர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள். உடன் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...