கொரோனா தொற்றால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல நடிகரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனும் பிரபல நடிகருமான ஹம்சவர்தனின் மனைவி சாந்திக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை காரணமாக அவர் குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாந்தி ஹம்சவர்தனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட, அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் இன்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 42.

ஹம்சவர்தன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு நாளை மதியம் 2:30 மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...