கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் பலவற்றை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
இந்தா நிலையில், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பூ, பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குழந்தையின் அழுகையைக் கேட்டு பசியறிந்து பாலூட்டும் தாய் உள்ளம் கொண்ட ஒரு சிறந்த தலைவர். நாட்டை நல்வழிப்படுத்தும் நல்ல அரசர் தாங்கள். வெற்றி பெற்றதைக்கூட கொண்டாடாமல் உங்களுடன் உங்களது பிறப்புகளையும் கொண்டாடவிடாமல் மக்களுக்கு சேவை செய்வது போற்றுவதற்கு உரியது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய், மற்றும் 14 உணவு பொருட்கள், தமிழறிஞர்களே எதிர்பார்க்காத வண்ணம் அவர்களுக்கு தந்த மரியாதை, கொரோனா உயிர் கொல்லியை அழிக்க போராடிக் கொண்டிருக்கும் உங்களது சேவை சரித்திரம் தானே எழுதிக் கொள்ளும்.
எப்போது பார்த்தாலும் அரசிடமும் வசதிபடைத்தவரிடமும் உதவி கேட்க கூச்சப்படுபவன் கலைஞன், உழைக்க வேண்டும், உழைத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதுதான் படைப்பாளியின் குணம். அவர்களது தேவை அறிந்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தங்களுக்கும் தங்களது அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சார்பில் நன்றி கலந்த வணக்கங்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...