தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வெற்றி பெறுவதற்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட மிக முக்கியமானது அதிஷ்ட்டம். அந்த அதிஷ்ட்டம் இருந்தால் விஜய் சேதுபதி போன்ற சாதாரண மனிதர்கள் கூட மாமனிதனாக முடியும், அதே அதிஷ்ட்டம் இல்லை என்றால், அரவிந்த்சாமி போன்ற அழகான ஹீரோக்கள் வில்லனாவதும் உண்டு.
இப்படிப்பட்ட அந்த அதிஷ்ட்டம் சிலருக்கு இயற்கையிலேயே இருக்க, பலரோ அதை தேடி செல்வதும் உண்டு. அப்படி தேடி செல்பவர்கள் செல்லும் முதல் வேலை, தங்களது பெயரை மாற்றிக்கொள்வது. அதிலும், ’வி’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம், என்ற நம்பிக்கை சினிமாவில் ரொம்பவே அதிகம்.
அப்படிப்பட்ட நம்பிக்கையோடு தான் தமிழ் சினிமாவில் பல வி நடிகர்கள் அறிமுகமாகி அதில் பலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதே நம்பிக்கையில், இளம் நடிகர் ஒருவர் வெற்றிக்காக இந்த பழைய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
’கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ’பட்டதாரி’, ’மாயநதி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, அதிதி மேனன் என்ற நடிகை விவாகரத்தில் தான் அதிகம் அறியப்பட்டார். தற்போது ஒரு நடிகராக தமிழக மக்கள் தன்னை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அபி சரவணன் கடுமையாக போராடி வருகிறார்.
அதன்படி, ‘சாயம்’, ’கும்பாரி’ உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் அபி சரவணன், உழைப்பு மட்டும் போதது, அதிஷ்ட்டமும் வேண்டும் என்பதால், தற்போது தனது பெயரை ‘விஜய் விஷ்வா’ (Vijay Vishwa) என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
தனது பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள அபி சரவணன், இனி தன்னை விஜய் விஷ்வா என்று அழைக்கும்படியும், தன்னைப் பற்றிய செய்திகள் உள்ளிட்ட அனைத்திலும் தனது பெயரையே பயன்படுத்துமாறும் அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...