விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கும் வெற்றிமாறன், தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் திரைப்படம் ஒன்றையும் தயாரிக்க இருக்கிறார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசனுடன் இணைந்து வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

‘அதிகாரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது. இந்தியா மற்றும் மலேசியாவின் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...