தமிழக பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற தொழிலதிபருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி கொடுப்பதாக கூறி, அதற்கு கட்டணமாக அவரிடம் இருந்து ரூ.1 கோடியை ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரூ.1 கோடியை பெற்றுக்கொண்ட ஆர்.கே.சுரேஷ், சொன்னது போல் கடன் வாங்கி கொடுக்கவில்லையாம். மேலும், ராமமூர்த்தி இறந்து விட்டாராம். இதையடுத்து ராமமூர்த்தியின் மனைவி வீனா, ஆர்.கே.சுரேஷ் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் தனது கணவர் ராமமூர்த்தியை ஆர்.கே.சுரேஷுக்கு அறிமுகம் செய்து வைத்த கமலகண்ணன், தங்களை போல் பலரை மோசடி செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக வீனா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பல முறை காவல்துறையில் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறும் வீனா, காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...