தமிழக பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற தொழிலதிபருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி கொடுப்பதாக கூறி, அதற்கு கட்டணமாக அவரிடம் இருந்து ரூ.1 கோடியை ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரூ.1 கோடியை பெற்றுக்கொண்ட ஆர்.கே.சுரேஷ், சொன்னது போல் கடன் வாங்கி கொடுக்கவில்லையாம். மேலும், ராமமூர்த்தி இறந்து விட்டாராம். இதையடுத்து ராமமூர்த்தியின் மனைவி வீனா, ஆர்.கே.சுரேஷ் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் தனது கணவர் ராமமூர்த்தியை ஆர்.கே.சுரேஷுக்கு அறிமுகம் செய்து வைத்த கமலகண்ணன், தங்களை போல் பலரை மோசடி செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக வீனா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பல முறை காவல்துறையில் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறும் வீனா, காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...