திரைத்துறையை நெறிப்படுத்தும் நடவடிக்கையாக, ஒளிப்பதிவு சட்டத்தில் ஒன்றிய அரசு நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையினரின் படைப்பு சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ் திரையுலகினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சட்ட திருத்தத்திற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வலையை நெறிப்பதற்காக அல்ல” என்று பதிவுட்டுள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...