கொரோனா பாதிப்பினால் தமிழ் சினிமா மட்டும் இன்றி பிற மொழி திரையுலகிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பச்சை என்கிற காத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சரண்யா சசி, மலையாளத்தில் ‘சோட்டா மும்பை’, ‘தலப்பாவு’, ‘மரியா காலிப்பினலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடங்களிலும் நடித்து வந்தார்.
சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசி, கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவருடைய தோழியும், மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...