கொரோனா பாதிப்பினால் தமிழ் சினிமா மட்டும் இன்றி பிற மொழி திரையுலகிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பச்சை என்கிற காத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சரண்யா சசி, மலையாளத்தில் ‘சோட்டா மும்பை’, ‘தலப்பாவு’, ‘மரியா காலிப்பினலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடங்களிலும் நடித்து வந்தார்.

சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசி, கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவருடைய தோழியும், மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...