கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் முக்கிய நடிகரான விஜயகுமார், தற்போது சீரியல் மற்றும் திரைப்படங்கள் என்று பிஸியாக நடித்துக் கொண்டிருக்க, முன்னணி இயக்குநர் ஒருவரது பேச்சை கேட்டு சுமார் ஆறு மாதமாக காத்திருந்த அவரை, அந்த முன்னணி இயக்குநர் கடுப்பேற்றியிருக்கும் தகவல் கசிந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாம். கொரோனாவால் தடைபட்ட அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிப்பதாக நம்பியிருந்த விஜயகுமார் பெரும் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறாராம்.
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விஜயகுமாருக்கு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாக கூறிய மணிரத்னம், அதற்காக அவரை தாடி வளர்க்க சொன்னாராம். அவரும் சுமார் ஆறு மாதமாக தாடி வளர்த்துக் கொண்டிருக்க, மணிரத்னத்திடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லையாம்.
இந்த நிலையில், விஜயகுமாருக்கு சொன்ன அந்த கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாம். இந்த தகவலை, காலதாமதமாக அறிந்துக்கொண்ட நடிகர் விஜயகுமார், இயக்குநர் மணிரத்னத்தை கரடு முரடான வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டாராம்.

இப்போதும் இயக்குநர் மணிரத்னத்தின் பெயரை கேட்டால் கடுப்பாகும் நடிகர் விஜயகுமார், அவரை சகட்டு மேனிக்கு திட்ட தொடங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...