பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 98.
1944 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமான திலீப்குமார், ‘தேவதாஸ்’, ‘கங்கா யமுனா’, ‘ஆன்’, ‘தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தர்.
வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த திலீப்குமாருக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98.
திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1944 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான திலீப்குமார், 50 ஆண்டுகளில் 65 திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கான உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, மற்றும் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...